பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர் 2,000 பயனாளிகளுக்கு பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.