districts

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிப்பு

கரூர், ஜூலை 17 -

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாம்  கள் நடைபெறும் நாட்கள் குறித்து  கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்  கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்திருப்பதாவது:

    கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்  பெற விண்ணப்பப் பதிவு முகாம் கள் இரண்டு கட்டங்களாக நடை பெற உள்ளன.  

    முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023  வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.8. 2023 வரை நடைபெறும். நியாய விலைக் கடைப் பணியாளர், ஒவ் வொரு நியாய விலைக் கடைப்  பகுதியிலும் முகாம்கள் நடை பெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய வற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கனை வீட்டில் நேரடி யாக வழங்குவார்.  

    டோக்கன் வழங்கும் பணி,  முகாம் நடைபெறும் நாளுக்கு 4  நாட்கள் முன்பாகத் தொடங்கும்.  பொதுமக்கள் இந்த விண்ணப் பங்களைப் பெறுவதற்காக நியாய  விலைக் கடைக்கு வரத் தேவை யில்லை. குடும்ப அட்டை இருக்கும்  நியாய விலைக் கடைப் பகுதியில்  நடைபெறும் முகாமில் மட்டுமே  விண்ணப்பதாரர்கள் விண்ணப் பிக்க வேண்டும்.  

    விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள  குடும்பத்தலைவி, விண்ணப்பங் களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடை பெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

     விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்  டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல்  எடுத்து இணைக்கத் தேவை யில்லை.

     மகளிர் உரிமைத் திட்டத்  தில் விண்ணப்பம் செய்ய, வரு வாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற  எவ்வித சான்றுகளையும் விண்ணப்  பித்துப் பெறத் தேவையில்லை.  விண்ணப்பப் பதிவு முகாமில்  ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி  வரையும், பிற்பகல் 2 மணி முதல்  5.30 மணி வரையும் நடைபெறும்.

    முகாம் நடைபெறும் குடியிருப்பு கள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடை களில் தகவல் பலகையாக வைக் கப்படும்.  விண்ணப்பப் பதிவு முகாமிற்கு  வருகை புரியும் விண்ணப்பதா ரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு,  அவர்களின் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்  படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமைய வில்லை எனில், ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெறப்படும்.

     இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.