கும்பகோணம், செப்.1 - வணிக வரித்துறை அதிகாரி எனக் கூறி மோசடி செய்து எல்இடி டிவிகளை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப் பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் யாதவ் என்பவர் வாக னத்தில் மின்சாதன பொருட்களை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வந்து கொண்டிருந் தார். கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர் பகுதியில் அவர் வந்த போது, ஒருவர் வாகனத்தை நிறுத்தி யுள்ளார். பின்னர் அவர் தன்னை வணிக வரித்துறை அதிகாரி எனக்கூறி, போலி அடையாள அட்டையை காட்டி, வாகனத்தில் ஏறி எல்இடி டிவி, ஹோம் தியேட்டர், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை சோதனை செய்துள்ளார். இவரை அதிகாரி என நினைத்து, சுனில்குமார் யாதவ் அதற் குரிய ஆவணங்களை காட்டியுள்ளார். சோதனை செய்த போலி அதிகாரி, ஹோம் தியேட்டர் தொகையை குறைத் துக் காட்டி ஜிஎஸ்டி குறைவாக கட்டப் பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நட வடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு சுனில்குமார் யாதவ், நேரில் விளக்கம் கொடுத்து பணத்தை செலுத்துகிறேன் என்று கூறி யுள்ளார்.
ஆனால் அந்த நபர், சுனில்குமார் யாதவிடம் இருந்த செல்போன் மற்றும் வாகனத்தில் இருந்து ஆறு எல்இடி டிவி களை எடுத்துக் கொண்டு, அலுவல கத்திற்கு வந்து விளக்கம் தெரிவித்த பின், பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் சந்தேகமடைந்த சுனில் குமார் யாதவ், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கும்பகோணம் அருகே கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவர், வணிக வரித்துறை அதிகாரி என போலி அடையாள அட்டையை காட்டி ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுதாகரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், சுதாகர் வணிக வரித்துறை யில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுந ராக பணியாற்றியதும், கார் விபத்து காரணமாக கடந்த ஜூலை மாதம் பணி யில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. விசாரணையில், இவர் மயிலாடு துறை வணிக வரித்துறை அலுவல கத்தில் துணை வணிக வரித்துறை அலு வலராக பணியாற்றி வருவதாக போலி யாக ஒரு அடையாள அட்டையை தயார் செய்துள்ளார். மேலும், வாடகை காரை எடுத்துக் கொண்டு வெளி மாநிலங்க ளில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில் வசூல் வேட்டை யில் ஈடுபட்டது அம்பலமானது. அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசா ரித்து வருகின்றனர்.