districts

img

அரியலூர் மாணவி அனிதா நினைவு தினம்

திருவாரூர்/அரியலூர், செப்.2 - 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக  போராடி தற்கொலை செய்து கொண்ட அரிய லூர் மாணவி அனிதா உருவப் படத்திற்கு, இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட குழு சார்பில், திரு.வி.க அரசு கல்லூ ரியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட் டது. இதில் கல்லூரியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிரா மத்தில் உள்ள நீட் எதிர்ப்பு போராளி அனிதா  நினைவிடத்தில், இந்திய மாணவர் சங்கம்  சார்பில் மாவட்டச் செயலர் குணா தலைமை யில் வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கோ.அர விந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.