districts

img

அரியலூர் அரசு மருத்துவமனையில் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

அரியலூர், மே 8 - அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத் தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு  சிகிச்சை பிரிவில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதன்கிழமை ஆய்வு  செய்தார். அப்போது அவர் தெரிவிக்கை யில், “கோடை வெப்பம் மற்றும் வெப்ப  அலை பாதிப்புகளிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் அரியலூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில், உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு 10  படுக்கை வசதிகளுடன், மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவானது அனைத்து நாள்களிலும் செயல்படும். கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டு  வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கும் வசதிகள் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இப்பிரிவு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த மருத்துவ சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.