districts

img

குடிநீர்ப் பற்றாக்குறையால் அல்லல் நடவடிக்கை எடுப்பாரா அரியலூர் ஆட்சியர்?

அரியலூர், செப்.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் நகராட்சி விருத்தாச்சலம் சாலை, அடி பள்ளத்தெரு, மாந்தோப்பு தெரு உள்ளிட்ட  பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்  கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி களில மட்டும் நகராட்சி மூலம் வழங்கப்படும்  குடிநீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் வரு கிறது. குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் மிக வும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குடி நீர்ப் பற்றாக்குறையால் ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண் ணீர் பிடித்து வரும் சூழல் உள்ளது. இது  குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை.  திட்டமிட்டு தங்கள் பகுதியைப் புறக்க ணிப்பதோடு மக்களை வஞ்சிப்பதாக குற்  றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகம்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்க  வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்  வழங்க வேண்டுமென வலியுறுத்துகின்ற னர். இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் வெங்கடாசலம் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாகவே இப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது ஒரு நாள் குடிநீர் வழங்கினால் மறுநாள் குடிநீர் வழங்க மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மக்கள்  பிரச்சனையில் தலையிட வேண்டும். தினம்தோறும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யாத நிலையில் பகுதி மக்க ளைத் போராட்டம் நடத்துவோம்” என் றார்.  மேலும் அவர் கூறுகையில், “பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாத சூழல்  உள்ளது. பெரும்பாலானோர் வீட்டில் கழிப்  பறை வசதி இல்லாததால் பொதுக்கழிப்ப றையைத் தான் பயன்படுத்தினர்” என தமது வேதனையை வெளிப்படுத்தினார்.