districts

img

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

பாபநாசம், டிச.19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம் பேட்டையை அடுத்த பசுபதி கோவில், ஈச்சங்குடி கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் தஞ்சா வூர் வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பசுபதி கோவிலில் வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் நடப்பட்டிருந்த விவசாயி அசோக்குமார் வயலில்  ஆய்வு மேற்கொண்டார். தேசிய உணவு எண்ணெய் இயக்கத் தின் கீழ் கணபதி அக்ரஹாரத்தில், சோயா பீன்ஸ் விதை விநி யோகத்தை துவக்கி வைத்து, விவசாயிகளிடம் சோயா  பீன்ஸ் சாகுபடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஈச்சங்குடியில் விதைக்கும் இயந்திரம் மூலம் நெல் சாகு படி செய்த சரவணன் வயலிலும், வீரமாங்குடி கிராமத்தில் கோனோ வீடர் மூலம் களை எடுக்கும் பணியையும் ஆய்வு  செய்தார்.