அறந்தாங்கி, ஜன.11- புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி நகராட்சி யில் ஒப்பந்த பணியாளர் களுக்கு மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) க மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்றனர். நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள், சம்பளம் உட னடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறிய தால் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.