புதுக்கோட்டை, செப்.23 - அறந்தாங்கியை தலைமையிட மாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டு மென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட 16 ஆவது பிரதிநிதித்துவப் பேரவை புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநிலச் செயலாளர் அ.குபேரன் உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா சிறப்பு ரையாற்றினார். அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருவாக் கப்பட வேண்டும். புதுக்கோட்டை நாடாளு மன்றத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். சுற்றுலாத் துறையினர் ஆவுடை யார்கோவிலை மேம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் களுக்கு நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுவைப் பாதுகாக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண்.152, 139-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அனை வரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை (அவுட் சோர்சிங்) முறைகளை ரத்துசெய்ய வேண் டும். அரசு பயன்படுத்தும் மென்பொருள் திட்டங் களை தனியார்வசம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.