districts

img

செலக்சன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறந்தாங்கி, செப்.5 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடை பெற்றது.  பள்ளி தாளாளர் கண்ணை யன் தலைமை வகித்தார். சிறப்பு  விருந்தினராக பங்கேற்ற அறந் தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் திறந்து வைத் தார். நிகழ்வில் கௌரவ விருந்தி னராக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ச.குமார், ரோட்டரி  மாவட்டம் 3000 மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர் சேக், துணை ஆளுநர் ராமன் பரத்வாஜ், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கண் காட்சியை பார்த்து ரசித்தனர். சுமார் 400 அறி வியல் படைப்புகள் உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை குறித்து மாணவர்கள் ஆர்வத்துடன் எடுத்து ரைத்தனர். பள்ளி முதல்வர் உஷா கீதப்பிரியா  நன்றி கூறினார்.