திருவாரூர், ஏப்.24-
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட ரங்கில் ஏப்ரல் 27 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராம ரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொள் வார்கள்.
எனவே, திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரி விக்கலாம்.