திருச்சிராப்பள்ளி, ஏப்.8- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஈசிடி) சார்பில், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், கோடை கால சிறப்பு பயிற்சிகள் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், அடிப்படை கணினி இயக்கம், டேலி ப்ரைம், அச்சுக் கலைப் பதிப்பகவியல், செல்போன் சர்வீஸ் மற்றும் ஆங்கிலப் பேச்சு மற்றும் ஆளுமை திறன் மேம்பாடு ஆகிய சான்றிதழ் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. கட்டணத்தில் எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 50 சதவீத உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 25 சதவீத உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 4 மணி நேரம் வீதம் 2 பிரிவுகளாக வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும். அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பள்ளி, சாதி மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் ஏப்ரல் 10 முதல் 21-ஆம் தேதி வரை அலுவலக நேரத்தில் சேர்க்கையை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஈசிடி), பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி - 23 என்ற முகவரியில் நேரிலும், 0431-2332638, 89735 23807 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என ஐஈசிடி இயக்குநர் ராம் கணேஷ் தெரிவித்துள்ளார்.