districts

img

தேசிய அளவிலான சிலம்பப் போட்டி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

தில்லியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிப் பெற்று பதக்கங்களை வென்ற பாபநாசம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமிழ் மன்றம் மற்றும் அம்மாபேட்டை முத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தின. நிகழ்ச்சிக்கு அருள்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.