districts

img

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

 பாபநாசம்,டிச.21- தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா திருச்சி புத்த னாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்  வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சோமா ராஜேந்திரன் வரவேற்றார். இதில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷுக்கு, நேரு நினைவுக் கல்லூரி தலைவர் பாலசுப்பிரமணியன் சால்வை அணிவித்து, நினைவு  பரிசினை வழங்கி பாராட்டிப் பேசினார்.  விழாவில் செயலர் பொன் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப் பாளர் மீனாட்சி சுந்தரம், துணை இயக்குனர் சிவகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். துணை முதல்வர் தமிழ்மணி நன்றி கூறினார்.