புதுக்கோட்டை, மார்ச் 17 - நாடாளுமன்றத் தேர்தல் தேதி சனிக்கிழமை மாலை அறிவிக்கப் பட்டதை யொட்டி, திருச்சிராப்பள்ளி, தஞ்சா வூர், திருவாரூர், புதுக் கோட்டை, மயிலாடுதுறை, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் நடை பெற்றன. புதுக்கோட்டை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியரு மான ஐ.சா.மெர்சி ரம்யா சனிக்கிழமை மாலை அளித்த பேட்டியில், “மக்க ளவைத் தேர்தல் அறிவிப்பு வெளி யானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தொ டர்புடைய கோட்டாட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும். அனு மதியின்றி அரசியல், தேர்தல் கூட்டங் களை நடத்தக் கூடாது. வெகு மதிகளைக் கொடுப்பதும், வாங்குவ தும் குற்றம். சிறைத் தண்டனையு டன் அபராதமும் விதிக்கப்படலாம். மாவட்டம் முழுவதும் ஏற்க னவே 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவி னரும், 6 விடியோ கண்காணிப்புக் குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ள னர். ஒவ்வொரு குழுவிலும் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் உள்பட 3 பேர் இருப்பர். 24 மணி நேரமும் இந்தக் குழுவினர் சுழற்சி முறையில் கண்கா ணிப்புப் பணியில் ஈடு படுவர். தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார் களை தெரிவிக்க மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப் பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் - 1800 4252 735, 04322 229860, 229870, 229880, 229890. மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 149 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. காவல்துறை மூலம் கூடு தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படும்” என்றார்.
திருச்சிராப்பள்ளி
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியின ருக்கு சனிக்கிழமை மாலை கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு 81 பறக்கும் படைகள், 81 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 9 வீடி யோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்த லுக்காக செலவிடப்படும் தொகை யினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலை பேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் தெரி விக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க வேண்டிய கட்ட ணமில்லா தொலைபேசி எண். 1800-425-5016. கரூர் மாவட்டத்தில் 12 பறக்கும் படை குழுக்கள், 12 நிலையான கண் காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு, 24 மணி நேரமும் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்படும் பணம் மற்றும் இதரப் பொருட்கள் ESMS என்ற செயலி மூலம் பதிவு செய்யும் வசதி தற்போது புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சிய ரும், மாவட்ட தேர்தல் அலு வலருமான ஏ.பி.மகா பாரதி ஞாயிறன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரி விக்கையில், மயிலாடு துறை நாடாளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கி யுள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குச்சாவடிகளும், தஞ்சா வூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 89 வாக்குச்சா வடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவ டிக்கைகள் கண்காணிக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக் கலன்களையும் அரு காமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப் பதிவு அலுவலர்கள், 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடு படுத்தப்பட உள்ளனர். ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 60 அலுவ லர்கள் நுண் பார்வையாளர்களாக நிய மிக்கப்பட உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800- 425-8970 என்ற கட்டணமில்லா தொலை பேசியில் புகார் அளிக்கலாம்” என்றார்.