மாணவர்களுக்கு பரிசளிப்பு
பாபநாசம்,ஜுன் 19- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் பள்ளி சார்பில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவி பூங்குழலி, அதிக மதிப்பெண் கள் பெற்ற பகிமாவிற்கு ரூ 10 ஆயிரம், நதி பாலனுக்கு ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். இதில் பள்ளித் தாளா ளர் காஜா முகையதீன், பள்ளி முதல்வர் லூர்து ஜான்சன், உதவி முதல்வர் செல்வி, சாப் ஜான் உட்பட ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
நலவாரியப் பதிவை நேரடியாக செய்க! ஜூலை 16-இல் சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 19- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட முறைசாரா சங்கங்க ளின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
நலவாரியப் பதிவை நேரடியாக செய்ய வேண்டும். பணப் பயன்கள் கேட்பு மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16 அன்று திருச்சி மன்னார்புரம் சிக்னலில் இருந்து பேரணியாக சென்று, நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். தீர்மா னங்களை வழிமொழிந்து ஆட்டோ சங்க செயலாளர் மணிகண்டன், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் சந்திரன், கட்டுமான சங்க செயலாளர் சந்திரசேகர், தரைக்கடை சங்க செயலாளர் செல்வி, தையல் சங்க செயலாளர் பிரமிளா ஆகியோர் பேசினர்.