districts

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மயிலாடுதுறை, ஜன.11- மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற் கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமை யாக அர்ப்பணித்த தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை  சாம்பியன் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறு வனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்  சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சி யரின் தலைமையில் அமைக்கப்பட்ட, பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் ((www.tnpcb.gov.in)) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாகப்பட்டி னம் என்ற முகவரியை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 15.04.2023 கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;