தாட்கோ கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுக்கோட்டை, நவ.11- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலம் தையல் தொழி லுக்கு கடனுதவி பெற விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவிக்கையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின்கீழ் தையல் பயின்ற வர்கள் மற்றும் தையல் தொழி லுக்கு கடனுதவி பெற்ற ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் இனத் தைச் சார்ந்த பயனாளிகளிட மிருந்து விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளம் www.tahdco. com மூலம் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலு வலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக் கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள லாம் என்றார்.
மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது
வேதாரண்யம், நவ.11- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேம்ப தேவன்காடு பகுதியில் உள்ள புது குளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, முதலை ஒன்று கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். வனத்துறையினரும், தீய ணைப்புத்துறையினரும் முதலை இருப்பதை உறுதிசெய்து, அதை பிடிப்பதற்கு பலமுறை முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் வெள்ளியன்று குளத்தின் கரையோரத்தில், வலையில் சிக்கி இருந்த முத லையை வனம் மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். 7 அடி நீள மும் 100 கிலோ எடையும் உள்ள இந்த முதலை, கும்பகோணம் பகுதி யில் உள்ள அணைக்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.