districts

img

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்க வேண்டுகோள்

நாகர்கோவில், ஜூன் 30

     சமூக பாதுகாப்பு ஓய்வூ தியம் பெறுவதை காரணம் காட்டி மீன்பிடி தடைக்கால  நிவாரணம் வழங்க மறுப் பதை கைவிடவும், பார பட்சமின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்கிடவும் கேட்டு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம்  சார்பில் மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.

    அந்த மனுவில் குறிப் பிட்டிருப்பதாவது : கன்னியா குமரி மாவட்டம் மீன்பிடி  கிராமங்களில் மீன்பிடி  தடைக்காலத்தில் வழங் கப்படும் நிவாரணங்கள் பெறும் பயனாளிகளின் கணக்கெடுப்புகள் தற் போது நடைபெற்று வரு கின்றன.

     மீனவ கிராமங்க ளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் முதியோர், விதவை, மாற் றுத்திறனாளிகள் பென்சன் தொகை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் பென்சன்  தொகை வாங்கும் பயனா ளிகளுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் மறுக்கப் பட்டு வருகிறது.

    இதனால் மேற்படி பயனாளிகளுக்கு நிவாரணம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. இதன் காரணமாக பென்சன் வாங்கும் பயனாளி கள் பலர் நிவாரணத்தொகை கிடைக்காமல் கடுமையான  சிரமங்களை சந்தித்து வரு கின்றனர். ஏற்கனவே மழைக்கால நிவாரண  தொகையும் வழங்கப்படா மல் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி பென்சன் வாங்கும் பயனாளி கள் அனைவருக்கும் பார பட்சமின்றி மீன்பிடி தடைக் கால நிவாரணத்தொகை கிடைத்திட ஏற்பாடு செய்திடு மாறு கேட்டு கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.