districts

img

மயிலாடுதுறை, பெரம்பலூரில் போதை எதிர்ப்பியக்கம்

பெரம்பலூர், பிப்.12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து  தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மயிலாடுதுறையில் வட்டதலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை  மயிலாடுதுறை மாவட்டத் துணை கண்காணிப்பாளர் எம்.வசந்தராஜ்  கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், வட்டச் செயலாளர் குமரேசன், பாலமுரு கன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பெரம்பலூர் புதியபேருந்து நிலை யத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.கருணாகரன் துவக்கி வைத்தார். கட்சி மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.