districts

img

தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை

தூத்துக்குடி, ஏப். 25 சிவில் விமானப் போக்கு வரத்து பாதுகாப்பு அமைப்பு  உத்தரவின்படி, நாடு முழு வதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஒத் திகை புதனன்று நடை பெற்றது. இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்க வும், அச்சுறுத்தலைச் சமா ளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிர் கொள்ளவும் ஒத்திகை நடை பெற்றது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் விமான நிலைய குழுக் கூட்டம் நடை பெற்றது. தொடா்ந்து, விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் தயார்நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் ஆர்.ராஜேஷ் மற்றும் மத்திய உளவுத் துறை, தேசிய பாதுகாப்பு படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரி கள் கலந்து கொண்டனர்.