பாபநாசம், அக்.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த வழுத்தூர், செளக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. நெகிழியை ஒழித்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வலியுறுத்திய இப்பேரணி, பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழி யாகச் சென்றது. மேலும், பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் கால மீட்பு பயிற்சி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.