பொன்னமராவதி, ஏப்.28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே உள்ள திருக்களாம்பூரில் கொடி யேரி அம்மன் பூச்சொரிதல் விழாவை யொட்டி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கள்-பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேஎஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அனைத்து வயதினரும் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடை பெற்றது. போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். போட்டி துவங்கு வதற்கு முன்பாக, மது ஒழிப்பிற்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. போட்டி, அண்ணாநகர் விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கி, சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப் பட்டது. மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக நடந்த இப்போட்டியில் புதுக் கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாத புரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர் களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.