மயிலாடுதுறை, பிப்.25 - மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோவில் ஒன்றியம், காருகுடி கிரா மத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. வட்டார கல்வி அலுவலர் தினேஷ் தலைமையில் நடை பெற்ற விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பாலு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரூபா சிவக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலை மையாசிரியர் ஜீவா வர வேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் ராஜேஷ், பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ஆனந்தி கவியரசன் வாழ்த்திப் பேசி னர். விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங் கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.