districts

முதலமைச்சர் அறிவித்த உயர்மட்ட பாலங்கள் பணி 100 சதவீதம் நிறைவேற்றப்படும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருச்சிராப்பள்ளி, மே 4 - திருச்சி - திண்டுக்கல் சாலையில் முதலமைச் சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ.74.80 கோடி மதிப்பிலான நான்கு வழித்தட  சாலைப் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து, சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்சியில் நீண்ட  நாட்களாக பணிகள் முடிவுபெறாமல் உள்ள  அரிஸ்டோ மேம்பாலப் பணியான திருச்சி - சென்னை செல்லும் சாலையை இணைக்கும் மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச் சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து  அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.  பின்னர், பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாகவும், காவிரி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளையும், புதிதாக அமை யவுள்ள காவிரி பாலம் தொடர்பாகவும், அண்ணாசிலை முதல் மல்லாட்சிபுரம் (குட முருட்டி) வரையிலான உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், குடமுருட்டி கரைப்பகுதியில் சாலை அமைத்தல் குறித்தும் நீதிமன்றம் ரவுண்டானா முதல் தலைமை தபால் நிலையம் வரையிலான உயர்மட்ட சாலை அமைத்தல் குறித்தும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியா ளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட் டத்தில் 190 சாலைகளை மேம்படுத்த ரூ.250  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்ச ரின் மேம்பாட்டுத் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 32 சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன. இதில் 4 வழிச்சாலையாக திருச்சி - திண்டுக்கல் சாலை ரூ.74.80 கோடியில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறி வித்த உயர்மட்ட பாலங்கள் 100 சதவீதம் நிறை வேற்றப்படும் என்றார்.  இந்நிகழ்சிகளில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.