districts

அண்ணாமலை வேகமாக பேசுமளவுக்கு விவேகமில்லை சு.திருநாவுக்கரசர் எம்பி., கருத்து

புதுக்கோட்டை, ஜூன் 15-  

    அண்ணாமலை வேகமாகப் பேசுகிறாரே தவிர, விவேகமாகப் பேசவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திரு நாவுக்கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் அவர் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அமைச்சர்கள் குறித்து நானோ, பிற கட்சியினரோ சட்டப்படியான தீர்ப்புகளை வைத்து விமர்சிப்பது என்பது வேறு. அதிமுக வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, 4 எம்எல்ஏ தொகுதிகளில் வென்று, அடுத்து எம்பி தேர்தலில் அதே கூட்டணியில் தொடர்ந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவ்வாறு விமர்சித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

    அண்ணாமலை வேகமாகப் பேசுகிறாரே தவிர, விவேகமாகப் பேசவில்லை. நிதானமாகப் பேச வேண்டும். இந்தக் கருத்தை அவ ராகப் பேசினாரா, அல்லது அக்கட்சியின் தலைவர்கள் சொல்லிப் பேசி னாரா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

   நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் தவறாக செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் தீர்ப்பை வழங்கப் போகிறார்கள். இதற்கிடையே ஒன்றிய அரசு ஆளுநர்களை வைத்துக் கொண்டோ, அமலாக்கத்துறையை வைத்து சோதனைகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்றார்.