பெரம்பலூர், அக்.7 - விவசாயிகளின் நலம் காக்கும் வகையிலும், வேளாண்மையை பெருக்கும் வகையிலும் எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு அறி வித்து செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தை சார்ந்திருக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு திட்டங் களை அறிவித்து அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் தழுதாழை கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முகாமை துவக்கி வைத்தார். கால்நடைகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 177 கால்நடை கள் பயனடைந்தன. மேலும் 450 பசுக்களுக் கும், 200 ஆடுகளுக்கும், 10 நாய்களுக்கும், 200 கோழிகளுக்கும் என மொத்தம் 860 கால் நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிக பால் உற்பத்தி செய்து வழங்கிய மாடுகளின் உரிமையா ளர்கள் 3 பேருக்கு சிறந்த மேலாண்மைக்கான விருதுகளையும், 3 பேருக்கு சிறந்த கன்று வளர்ப்புக்கான விருதுகளையும், பயனாளி களுக்கு பால் கொள்கலன்கள், தாது உப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கான நோய்கள் மற்றும் தீவன அபிவிருத்தி குறித்த விழிப்புணர்வு கண் காட்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டனர்.