தஞ்சாவூர், நவ.23 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் முன்னிலை வகித்தார். இதில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.