பாஜக அரசால் கொண்டுவரபடவுள்ள “விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை”எதிர்த்து நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சிவக்குமார், வழக்கறிஞர் கு.காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.