districts

ரத்தச்சோகை பிரச்சனை கரூர் மாவட்ட நிலவரம்

கரூர், ஜூலை 6-

    கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்து வோம் திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல்  12-ஆம் வகுப்பு வரையிலான மாணவி களுக்கு ஹீமோகுளோபின் மறு ஆய்விற்காக இரத்த மாதிரி சேகரிப்பை ஆட்சியர் த.பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.

    கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும்  9-12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு  ஹீமோகுளோபின் ஆய்வு தமிழகத்திலேயே  முதன்முறையாக“உதிரம் உயர்த்துவோம்” திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் 17.000  மாணவிகளுக்கு ஆய்வு செய்யப் பட்டது. இதில் 7716 மாணவிகளில் 3,698  லேசான இரத்தசோகை, 3,498 மிதமான  இரத்தசோகை, 5,20 அதிகமான இரத்த சோகை அளவும் இருப்பது கண்டறியப் பட்டது. இவர்கள் அனைவரும் வளரிளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.