districts

img

வீரத்தாய் குயிலிக்கு உருவச்சிலை நிறுவப்படும்

சிவகங்கை, ஜன.4-  விடுதலைப் போராட்ட வீர மங்கை வேலுநாச்சியார் அவர் களின் 294-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக் குளத்தில் அமைந்துள்ள வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்ட பத்தில் ஜனவரி 3 அன்று அவ ரது உருவச்சிலைக்கு, கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா  அஜித், சட்டமன்ற உறுப்பி னர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) ,மாங்குடி (காரைக்குடி) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத னைத்தொடர்ந்து, அவ்வளா கத்திலுள்ள வீரத்தாய் குயிலி  அவர்களின் நினைவுச்சின்னத் திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். இந்நிகழ்ச்சியில் கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், இந்திய  விடுதலை வரலாற்றில் ஆங்கி லேயர்களை எதிர்த்து ஆயுதம்  ஏந்தி வெற்றி கண்டு, தமிழ கத்திற்கு பெருமை சேர்த்த முதல் வீரப்பெண்மணி வீர மங்கை வேலுநாச்சியார் ஆவார். தமிழ்நாடு முதல மைச்சரின் அறிவிப்புக்கி ணங்க வீரத்தாய் குயிலி நினை வுச்சின்னத்திற்கு அருகில் திரு வுருவச்சிலையும் மற்றும் சுதந் திர போராட்டத்தில் பங்கேற்ற வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு நகரம்பட்டி கிரா மத்தில் திருவுருவச்சிலை அமைப்பதற்கும் அதே போன்று, திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் அண்ணல் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினைவாக மணி மண்டபமும் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் நமச்சிவா யம், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலை வர் சேங்கைமாறன், சிவ கங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை துணை காவல் கண்காணிப்பா ளர் சிபி சாய் சௌந்தர்யன், சூரக்  குளம் ஊராட்சி மன்றத்தலை வர் மலைச்சாமி மற்றும் உள் ளாட்சி அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.