districts

img

குத்தாலம் பேரூராட்சி 4 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் சினேகாவுக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, பிப்.14 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சமூக ஆர்வலர் ஆர்.சினேகாவிற்கு பல்வேறு  தரப்பினரும் உற்சாக வரவேற்பளித்து ஆதரித்து வருகின்றனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஸ்டாலின் தலைமையில், ஒன்றியச்  செயலாளர் சி.விஜயகாந்த், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.மார்க்ஸ், கண்ணகி உள்ளிட்டோர் வேட்பாளர் சினேகாவுடன் சென்று வாக்குறுதிகளை முன்வைத்தும், மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்தி வரும் மக்கள் நலனுக்கான போராட்டங் களை கூறியும் வாக்குச் சேகரித்தனர்.  வார்டுக்குட்பட்ட பஞ்சுக்கார செட்டித் தெரு, காவிரிக்கரைத் தெரு, பள்ளிக்கூடத் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்து ஆதரவு அளித்து  வருகின்றனர். குறிப்பாக எதிர்த்து போட்டி யிடும் வேட்பாளர்களின் உறவினர்களே மார்க்சிஸ்ட் வேட்பாளர் சினேகாவை வீதிக்கு வந்து, அன்போடு வீட்டிற்குள் அழைத்துச்சென்று நலம் விசாரித்தது அனைவரையும் சிலிர்க்க வைத்தது.