கும்பகோணம், நவ.5- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி ஊராட்சியில் மேல ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மக்கள் சிலருக்கு அரசு தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அவை பழுத டைந்து மிகவும் மோசமான நிலையில், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, ஆதி திராவிடர் தெருவில் உள்ள தொகுப்பு வீடு களை சீரமைக்கவும் இடித்துவிட்டு புதிதாக கட்டித் தரவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், செம்மங்குடி மேலஆதி திராவிடர் தெருவில் உள்ள பத்மா என்ற மூதாட்டி அவருக்கு சொந்தமான பழைய தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்துள் ளார். சனிக்கிழமை இரவு வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து பத்மா மீது விழுந்தன. இதில் மூதாட்டி படுகாயமடைந்தார். இதை யடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனத். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், வாலிபர் சங்க பொறுப் பாளர் வெங்கடேசன், அரவிந்த் உள்ளிட் டோர் இடிந்த வீட்டை நேரில் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதுபோன்று இடியும் தருவா யில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய வீடு கட்டித் தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.