தஞ்சாவூர், நவ.19 - தமிழ் முறைப்படி தஞ்சாவூர் இளைஞரை அமெரிக்க பெண் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். தஞ்சாவூரை சேர்ந்த எஸ்.சங்கரநாரா யணன் (35) பொறியியல் பட்டதாரியான இவர், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அமெரிக்கா வின் மாசச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவரும், எம்.ஏ. சைக்காலஜி படித்துவிட்டு தனியார் நிறுவ னத்தில் பணிபுரிந்து வருபவருமான அன்னி டிக்சன் (35) என்பவரும் 5 ஆண்டுகளாக காத லித்து வந்தனர். இக்காதலை இரு தரப்பு பெற்றோரும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் தஞ்சா வூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மந்திரங்கள் தமிழில் ஓதப்பட்டன. மேலும் மணமகன் சங்கரநாராய ணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவி னர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.