districts

img

சோர்வறியாமல் எழுதுப் பணியை தொடரும் 85 வயது இளைஞர்

‘எழுதுவதற்கு வயது முதிர்ச்சியெல்லாம் ஒரு தடையே இல்லை’ என்பதை நிரூபிக்கும்  வகையில் 85 வயதிலும் 102 தமிழ் புத்தகங்களை எழுதி வெளியிட்டதோடு இன்னமும் எழுதிக்கொண்டே இருக் கிறார் எழுத்தாளர் ஒருவர்.  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே யுள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியசுவாமி. விவசாய குடும்பத்தில் 1937-ல் பிறந்த இவர், பள்ளிப் படிப்புக்கு பிறகு   தமிழ்மொழி மீதான ஆர்வத்தால் மாட்டு  வண்டி ஓட்டி அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு  மேற்படிப்பை தொடர்ந்துள்ளார்.  தமிழ் இலக்கியத்தில் எம்ஏ, பிஎட் பட்டம் பெற்ற கலியசுவாமி, 1962-ல் இடைநிலை ஆசிரியராக   பணி யில் சேர்ந்துள்ளார். தமிழ் மொழி மீதான தீராத ஆர்வத் தால், கலியசுவாமி என்ற தனது பெயரை கலை வேந்தன் என மாற்றிக் கொண்டார். தான் ஒரு சிறந்த எழுத்தாளனாக வேண்டுமென்ற எழுத்தார்வத்திலும், தனது தந்தை பெற்ற கடனால் ஏற்பட்ட அவமானத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, தான் எழுதிய ‘பணக்காரன்’ என்ற சிறுகதை தொகுப்பை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  ‘பணக்காரன்’ சிறுகதைக்கு பிறகு மனிதநேய தொடர்பு, மானம், பொதுவுடைமை இவற்றை பிரதி பலிக்கும் வகையில் எழுதியுள்ளார்.

வைகறையில் எழுந்த தாலாட்டுகள், உன்னை அறிந்து கொள், மழை யில் நனையும் பட்டம், வலைக்குள் தேனீக்கள், ஓர்  ஆசிரியையின் காதல் போராட்டம், புரட்சித் தலைவி யின் பகுத்தறிவு பாசறை உள்ளிட்ட  கவிதைகள், கதை கள், கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள் என 102 புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.  தனது மகள் “தேங்கனி” பெயரில் பதிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி சொந்த வெளியீடாக வெளி யிட்டுள்ளார். 1995-ல் ஆசிரியர் பணியிலிருந்து இவர் ஓய்வு பெற்றாலும் எழுதுவதற்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து புத்தகங்களை எழுதி வருகிறார். இதுவரை 102 நூல்களை  எழுதியுள்ள நிலையில், மேலும் 86 நூல்களை வெளியிட தயாராக வைத்துள்ளதாக கூறு கிறார் உற்சாகத்துடன்.  தற்போது குத்தாலம் பகுதியில் வசிக்கும் இவர், தன்னுடைய நூல்களை சைக்கிளில் எடுத்துச் சென்று  அருகில் உள்ள நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாக அளித்து மகிழ்ந்து வருகிறார். சுறுசுறுப் பாகவே இருக்கும் அவரின் வீட்டின் முன் பக்கத்தில் தமிழர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வை யுங்கள் என்று குறிப்பிட்டு “இனிய தமிழ் சொற்கள்” என்ற பெயரில், அவர் வைத்துள்ள அறிவிப்பு பலகை யில் தமிழ்ப் பெயர்கள் நிரம்பி நிற்கின்றன. இது அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் கவனத்தை  மிகவும் கவர்ந்து வருகிறது.

உடல் நலத்தில் சற்று தோய்வு இருந்தாலும் மனைவியை கவனித்துக் கொண்டு 85 வயதிலும் துடிப்பு மிக்க இளைஞர் போல்  பிற நூல்களை படிப்பதிலும் தேடுவதிலும் ஓடிக் கொண்டே இருக்கிறார்.  செல்போன்கள் ஆதிக்கம் நிறைந்துவிட்ட இந்த  காலத்தில், புத்தகம் வாசித்தலின் பழக்கம் வெகுவாக  குறைந்து வருவது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்து வதாகவும், தன்னைப் போன்ற எழுத்தாளர்களை ஊக்கு விக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கு விக்க வேண்டும் என கலைவேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஒரு நூலகமாகவே நடமாடும் கலைவேந்தன் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல. அவரைப் போன்றவர்களை பாதுகாக்கவும் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.