கரூர், ஆக.22-
இந்திய குற்றவியல் சட் டங்களில் மாற்றங்களை அறி விக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மசோதாவில், குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணைச் சட்டம், இந்திய சாட்சிய சட் டம் ஆகியவற்றின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் மக்கள் விரோத, சட்ட விரோத சரத்துக்களை யும் புதிதாக திணித்திருக்கி றது.
ஒன்றிய அரசின் இந்த அர சியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி யும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அவசரமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ள இந்த சட்டத் தினை உடனே திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.
அதனொரு பகுதியாக கரூர் வழக்கறிஞர் சங்கத் தின் சார்பில் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி கூட்டமைப்பின் மேற்கு மண்டல துணைத் தலைவர் ரமேஷ் பேசினார். இதில் ஏராளமான வழக்க றிஞர்கள் கலந்து கொண்ட னர்.