தஞ்சாவூர், நவ.9 - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத் திற்கு வராததால் ஆம்பலாப்பட்டு தெற்கு கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, ஆம்பலாபட்டு தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரு பவர் சரபோஜி. இவர் தனது பொறுப்பில் உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிரா மத்தில் உள்ள, கிராம நிர்வாக அலுவல கத்திற்கு வருவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இக்கிராமத்திற்கு உட்பட்டு பரங்கி வெட்டிக்காடு, குடிக்காடு, புலவர் குடிக் காடு, கீழக்கோட்டை, பாலாயிகுடிக்காடு, பொதியமான் தெரு என 2500 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட பகுதியாகும். கிராமத்தில் ஏற்கனவே பழைய கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தற்போது புதிதாக கிராம சேவை கட்டிடத்திலும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராம நிர்வாக அலு வலர் சரபோஜி கிராமத்திற்கே வராததால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியேக் கிடக்கிறது. இதன் காரணமாக தற்போது பயிர் காப்பீட்டு செய்வதற்காக சிட்டா, அடங்கல் பெறுவதற்காகவும், பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் அரசுத் துறை சார்ந்த பல்வேறு பணிகளுக்காகவும் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தனியார் இ- சேவை மையத்தில் விஏஓ
அவர் எந்நேரமும் ஒரத்தநாடு வட்டாட்சி யர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ- சேவை மையத்திலேயே இருப்பதாக வும், அவரை சந்திக்க வேண்டும் என்றால் அங்கேயே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் கூறு கின்றனர். மேலும், எந்த வேலை என்றா லும் “காசு இல்லாமல் காரியம் நடக்காது” என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை இது குறித்து சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசு ராஜா ஆகியோர் கூறுகையில், “கிராம நிர்வாக அலுவலர் அந்தந்த கிராமத்திலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. அவசர காரணமாக தாலுகா அலுவலகத்திற்கோ மற்ற இடங்களுக்கோ கிராம நிர்வாக அலுவலர் செல்ல நேர்ந்தால், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சுவற்றில் உள்ள அறிவிப்பு பலகையில் விபரம் எழுதிச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. ஆனால் இது எதையும் கிராம நிர்வாக அலுவலர் பின்பற்றுவதில்லை. சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கே கட்டுப்பட்டு செயல்படுகிறார். இவரால் பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நிலம் அளவீடு செய்வதற்காக சட்டத்திற்கு புறம்பாக, நில அளவையர் என்று கூறி, வேறொரு கிராம நிர்வாக அலுவலரை அழைத்து வந்து நிலத்தை அளந்ததாக புகார் கூறப்படுகிறது. எனவே, வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்திலேயே தங்கி பணி செய்யும் வகையில் கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.