பெரம்பலூர், மார்ச் 21 - வாக்குப்பதிவு நாளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக் கான கணினி வாயிலாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சி யருமான க.கற்பகம் வியாழ னன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி முறையில் வியாழனன்று பணி ஒதுக்கீடு செய் யப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, வாக்குப்பதிவு அலுவலர்-3 ஆகியோர் பணி நியமனம் செய்யப்படுவர். 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு அலுவலர் ஒருவர் கூடுதலாக நிய மிக்கப்படுவார். அதனடிப்படையில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 652 வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் என மொத்தம் 3,201 அலு வலர்களுக்கு பணி ஒதுக்கீடு கணினி மூலம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 24 அன்று, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியி லும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு மேல மாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி யிலும் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.