districts

அனைத்துத் தொழிற்சங்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22 -

      மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை தொடர்ந்து ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் லட்சக்கணக்கான உழைப்பாளி  மக்கள் கலந்து கொள்ளும் பெருந்திரள் அமர்வு நடைபெற உள்ளது.  

    ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத  கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். விவசாயிகள் விளைபொருட்களுக்கு கட்டுப் படியான விலை கொடுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலா ளர்களின் பாதுகாப்பு நிதி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.  

    அதன் ஒரு பகுதியாக திருச்சி எடத்தெரு அண்ணா சிலை, எட மலைப்பட்டிபுதூர், ராமசந்திரா நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட  பகுதிகளில் கடந்த ஜூலை 16,19,20 தேதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு தொ.மு.ச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், சார்லஸ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சுரேஷ், நடராஜன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வெங்கட் நாராயணன், என்.எம்.எஸ் ஜான்சன்,  கண்ணன், ஏஐசிசிடியு தேசிகன் உள்பட பலர் பேசினர்.