தஞ்சாவூர், டிச.29 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, 2022 பிப்ரவரி 23, 24 ஆகிய தேதி களில் நடைபெற உள்ள 48 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட் டத்தில் வெற்றிகரமாக நடத்துவது என செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற அனைத்து தொழிற் சங்க ஆயத்த மாநாட்டில் முடிவு எடுக்கப்பட் டது. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐ டியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆயத்த மாநாடு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி. சந்திரகுமார் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம் வரவேற்றார். தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கு. சேவியர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செய லாளர் என்.மோகன்ராஜ் வழிமொழிந்து பேசி னார். அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கே.பக்கிரி சாமி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் ரவிச் சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஏஐசிசிடியூ மாநிலச் செயலாளர் தேசிகன் நிறைவுரையாற்றினார். ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் ராஜன் நன்றி கூறினார். ஆயத்த மாநாட்டில், ஒன்றிய மோடி அரசு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்ப டுத்தி வருவதை கண்டித்து, தேசிய தொழிற் சங்கங்கள் சார்பில் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, நாடு தழு விய 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட் டத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்தை கைவிட வேண்டும். மின்சார சட்டத் திருத் தத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய பண மயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 7,500 நிவார ணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.