அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.