மதுரை, செப்.16- முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை யொட்டி மதுரை மாவட்டம் வலை யங்குளத்தில் மதிமுக சார்பில் மாநில மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் செப்டம்பர் 15 அன்று நடைபெற்றது. மாநாட்டில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய தணிக்கை குழு அறிக்கையின் மூலம் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய பாஜக அரசு ஊழல் செய்தி ருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதனால்தான் பிரதமரும் உள்துறை அமைச்சரும் சனாதனத்திற்கு ஆதரவாக பேசி நாட்டு மக்களை திசைத் திருப்பி வருகின்றனர். இந்தச் சூழலில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்த லில் நாட்டு மக்கள் மோடி தலைமை யிலான பாஜக அரசை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிய எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் மூலம் மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணி வேர்களை அறுத்தெறிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டிரத்தை கட்டமைக்க துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சீர் குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல் லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தீர்வு என மதிமுக மாநாடு பிரகடனம் செய்கிறது. தமிழகத்தில் உள்ள 4640 நூலகங்க ளில் 1915 நூலகங்கள் கிராமப்புறங்க ளில் உள்ளன இந்தச் சூழலில் மாநிலங்க ளின் உரிமையை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு நூலகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முயற்சித்திருப்பதை கைவிட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன் வரைவிற்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ,
தான் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. கட்சி போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற்றது என்ற செய்தியை கேட்கவே நான் விரும்பு கிறேன். மாநாட்டில் நிறைவுரையாற்றிய வைகோ, தமிழக மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மதிமுக போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. கட்சியின் சார்பில் மூன்று முறை நான் நடைபயணம் மேற்கொண்டு உள்ளேன். கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைக்காக நடந்துள் ளேன். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகம் பஞ்ச பூமியாக மாறும் என்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டியது மதிமுக. சென்னையிலும், தென்காசியிலும் நான் பேசியதை கேட்ட கலைஞர் நான் பேச நினைத்ததை அப்படியே நீ பேசி இருக்கிறாய் என்று என்னை பாராட்டி னார். அதேபோல் நான் பேச நினைத்த தை எல்லாம் என் மகன் பேசினார் என்றார். இந்த மாநாட்டில் மாநில பொரு ளாளர் செந்தில் அதிபன், ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், நாடாளுமன்ற உறுப்பி னர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ரொக்கை யா, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் மார்நாடு ஆகியோர் பேசினர். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.