districts

img

அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி

தஞ்சாவூர், ஜன.20- நகராட்சி வார்டு மறுசீரமைப் பில் குளறுபடியை கண்டித்து அனைத்து கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிராம் பட்டினம் நகராட்சி அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள அதி ராம்பட்டினம் நகராட்சி கடந்த முறை 21 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக இருந்து வந்த  நிலையில், தற்போது  அது நக ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 27 வார்டுகளைக் கொண்ட நக ராட்சியாக உருவானது.  இந்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் உள் ளாட்சித் தேர்தலில் வார்டு மறு சீரமைப்பில் இருபத்தி ஏழு வார்டு களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 14 வார்டுகள்   பெண்களு க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 27 வார்டுகளை 33 வார்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும்.  சிறுபான்மையினர் வார்டு களை திட்டமிட்டு மாற்றக்கூடாது என வலியுறுத்தி, முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும், முஸ்லீம் லீக், அதிமுக, விடுதலைச் சிறுத் தைகள், எஸ்டிபிஐ, தமுமுக,  மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் புத னன்று அதிராம்பட்டினம் நக ராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் முகமது சாலிகு தலை மை வகித்தார். முகமது சலீம்  வரவேற்றார். அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு செய லாளர் யூசுஃப் துவக்கவுரை யாற்றினார்.  தேசிய மனித உரிமை கூட்ட மைப்பு மண்டல ஒருங்கி ணைப்பாளர் முகமது தம்பி, தமுமுக மாநிலச் செயலாளர் அக மது ஹாஜா, அதிமுக நகரச் செயலாளர் பிச்சை மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அகமது அனஸ் நன்றி கூறினார்.  இதில், அதிகாரிகளின் இந்த  நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்தும், வார்டு ஒதுக்கீட்டை மறு  சீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.  இதையடுத்து பட்டுக் கோட்டை வட்டாட்சியர் கணேஷ் வரன், அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சசிகுமார், டிஎஸ்பி மோகன்தாஸ் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்தனர். இதையடுத்து முற்று கைப் போராட்டம் கைவிடப் பட்டது.