தஞ்சாவூர், ஜூலை 16 -
தமிழக சட்டமன்றப் பேரவை மேலவை முன்னாள் உறுப்பினர்கள் நற்பணி சங்கத் தலைவரும், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.சிங்காரம், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதா வது:
தாம்பரம் முதல் செங்கோட்டை வரை சென்று வரும் விரைவு ரயில் பட்டுக் கோட்டை, முத்துப்பேட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட ஊர்களில் நின்று செல்கிறது. ஆனால் அதிகமான பயணிகள் ஏறி இறங்கக் கூடிய பேராவூரணியில் நின்று செல்ல வில்லை.
இதற்கு முன், இந்த வழித் தடத்தில் இயங்கிய கம்பன் விரைவு ரயில், மனோரா விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் போன்ற ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று ரயில் பயணிகளை ஏற்றி சென்றது. தாம்பரம் - செங்கோட்டை ரயில் தற்போது பேராவூரணியில் நிற்பதில்லை.
பேராவூரணி பகுதியில் வசிக்கும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தஞ்சா வூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று ரயில் ஏறிச் செல்லும் நிலை தற்போது வரை நீடிக்கிறது. இதனால் இப்பகுதி யில் உள்ள பயணிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.
பேராவூரணியில் விரைவு ரயில் நின்று செல்ல அனைத்து அமைப்புகளும் நடவ டிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனா லும் இன்று வரை ரயில்கள் நிற்கவில்லை. எனவே, ஒரு மாத காலத்திற்குள் இந்த வழி யாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். இல்லையெனில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.