districts

img

ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, ஏப்.21-  

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்ட நாதபுரம் ஸ்ரீ சட்டநாத சுவாமி கோவில் கும்பா பிசேக யாகசாலைக்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பள்ளம் தோண்டிய போது ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், பூஜை  பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு சட்டநாதர் கோயில் பாதுகாப்பு வைப்பகத்தில் வைக்கப் பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி மற்றும் தொல்லியல் துறையினர் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தனர்.

   ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலு வலர் சோ.முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, சீர்காழி வரு வாய் வட்டாட்சியர்  செந்தில்குமார் மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை, தொல்லி யல் துறையை சார்ந்த அலுவலர்கள் உடனி ருந்தனர்.