புதுக்கோட்டை, டிச.24 - எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொ கையை கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கி யது, வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி யது உள்ளிட்ட ஏராளமான பணிகளை எய்டு இந்தியா நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத் தில் செய்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல்வேறு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எய்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. அதனொரு பகுதியாக இன்று மூன்று மாணவ, மாணவிகளுக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி யுள்ளது பாராட்டுக்குரியது” என்றார். முன்னதாக எய்டு இந்தியா நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற் றார். நிகழ்ச்சியில் கவிஞர் எஸ்.கவி வர்மன், அறிவியல் இயக்க மாநிலச் செயலா ளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், இந்திய தொழிற் சங்க மைய மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.