districts

img

சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கும் நப்பாசையில் அதிமுக - பாஜக தனித்தனியாகப் போட்டி

புதுக்கோட்டை, மார்ச் 29- இந்தியா கூட்டணியை ஆதரிக் கும் சிறுபான்மை வாக்குகளைப் பிரித்து விடலாம் என்ற நப்பாசை யிலேயே அதிமுகவும் பாஜகவும்  தனித்தனியாகப் போட்டியிடு கிறது. அது ஒருபோதும் பலிக் காது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. கரூர் மக்களைத் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்ட மன்றத் தொகுதியில் உள்ள இலுப் பூரில் காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணியை ஆதரித்து வியாழக் கிழமை இரவு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக-பாஜகவின் தப்புக் கணக்கு

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: எப்போதும் இந்தியா கூட்டணி யின் ஆதரவாக இருக்கும் சிறு பான்மை வாக்கு வங்கியில் பிளவை  ஏற்படுத்தலாம் என தப்புக் கணக்கு போட்டு, அதிமுகவை தனித்து விட்டு, பாஜகவும் தனி அணி யாக போட்டியிடுகிறார்கள். அவர்களின் நப்பாசை ஒருபோ தும் பலிக்காது. அவர்களின் சூழ்ச்சிகளை சிறுபான்மையின மக்கள் நன்கு புரிந்து வைத்தி ருக்கிறார்கள். இருவரும் சேர்ந்தி ருந்தால் டெபாசிட் வாங்கியிருக்க லாம். பிரிந்து போட்டியிடுவதால் அதைக்கூட வாங்க முடியாது. எந்த மேடையிலாவது பாஜக வைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ, 10 ஆண்டுகால பாஜக  ஆட்சியைப் பற்றியோ, தமிழ்நாட் டுக்கு அவர்கள் இழைத்த அநீதி களைப் பற்றியோ எடப்பாடி பழனி சாமி பேசியிருக்கிறாரா? அந்தத் தைரியம் அவருக்கு உண்டா? பாஜக, அதிமுக வாக்குகளை விட,  நாம் கூடுதலாக பெற வேண்டும். இந்தத் தொகுதிக்காக விஜய பாஸ்கர் என்ன செய்தார். மருத்து வமனைகளுக்கு பெயிண்ட் அடித் ததைத் தவிர அவர் எதையும் செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் வரு கின்றன. 4 தொகுதிகளிலும் அதிக  வாக்குகளைப் பெற்று, புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் சாதனை படைக்கும். சட்டப்பேர வைத் தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையில் விராலிமலை தொகுதி கூடுதல் வாக்குகளைத் தர வேண்டும். தொடர்ந்து விராலி மலை தொகுதியைக் காப்பாற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.  பாசிச சக்திகளை அப்புறப்படுத்துவோம்! மாநில சுற்றுச்சூழல் துறை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், “யாதும் ஊரே யாவ ரும் கேளிர் என்று முழங்கியவர் ஒரு தமிழர். ஆனால், மக்களை  மத, சாதி ரீதியாக பிளவுபடுத் தும் பாசிச சக்திகளை அப்புறப்படுத் துவதற்காக இந்தியா கூட்ட ணியை தமிழ்நாட்டில் வலுவாக  அமைத்திருக்கிறார் ஸ்டாலின்.  ஜனநாயகத்தைப் பாதுகாத்தி டவும், சமூக நீதியைப் பாதுகாத் திடவும் இந்த அணிக்கு மக்கள்  வாக்களிக்க வேண்டும். இந்த  தேசத்தைப் பாதுகாக்க வேண்டு மானால் ஆட்சி மாற்றம் ஏற்பட  வேண்டும். திமுக தலைமையி லான காங்கிரஸ் அணி ஆட்சி யைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

ஒதுக்கிய நிதி ரூ.36 லட்சம்; செலவு செய்தது ரூ.3 லட்சம்

வேட்பாளர் செ.ஜோதிமணி பேசுகையில், “விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதியில் ஒவ் வொரு குக்கிராமத்துக்கும் சென்றிருக்கிறேன். இங்கே முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இருக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில், எம்.பி., தொகுதி நிதியிலிருந்து 3 அரசு  மருத்துவமனைகளுக்கு வெண்டி லேட்டர் வாங்க ரூ.36 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்திருந்தேன். ஆனால் வெறும் ரூ.3 லட்சம்  மட்டுமே செலவு செய்திருந்தார் கள். அப்போதிருந்த மக்கள்  நல்வாழ்வுத் துறைச் செயலரு டன் சண்டையிட்டு மீதமுள்ள நிதியை வாங்கி, அரசுப் பள்ளிக்  கட்டடங்களைக் கட்டி முடித்திருக் கிறோம்” என்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே.செல்லப்பாண்டியன், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே. சண்முகம், சு.மதியழகன், ஒன்றி யச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் எம்.மகாதீர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சமூக நீதிக்காக பணியாற்றும் வேட்பாளர்

கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பேசுகையில், “சமூக நீதிக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சிறப்பாக பணியாற்றி வருபவர் ஜோதிமணி. சிறந்த நாடாளுமன்ற ஆளுமையான அவரை  மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை கரூர்  தொகுதி மக்களுக்கு உள்ளது” என்றார்.

மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கிறோம்!

மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “செயல்வீரர்கள் கூட்டத்தை மண்டபங்களில்தான் நடத்துகிறார்கள். நாம் இங்கே மாநாட்டைப் போல கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுவே நமது வெற்றியைப் பறைசாற்றுகிறது. இஸ்லாமியர்கள் நம்முடைய சகோதரர்கள். அவர்களின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது நமது கடமை. அண்ணன்-தம்பி உறவாக, பாசப்பிணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நிலைக்க வேண்டுமானால், ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கையில் வெற்றி மணியை அடிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை எட்டிப் பார்க்காத பிரதமர், தேர்தல் நேரத்தில் வந்து திமுகவை ஒழிப்பதாகக் கூறுகிறார். திமுகவின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். திமுகவை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் யாரும் இப்போது இல்லை. ஒன்றிய அரசின் திட்டங்களை திமுக எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். 25 பேர் தற்கொலைக்கு காரணமான நீட் திட்டத்தை எதிர்க்கிறோம். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்ததை எதிர்த்தோம். மக்களைப் பிளவுபடுத்தும் சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறோம். மக்களுக்கு விரோதமான திட்டங்களைத்தான் எதிர்க்கிறோம். அதிமுக-பாஜகவின் கள்ளக் கூட்டணியைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவரையும் விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.