தஞ்சாவூர், ஜன.28 - புலவன்காடு கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்து வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சி களுக்கு, ஞாயிற்றுக்கிழமை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமியை வரவேற்று, தஞ்சை முதல் பட்டுக் கோட்டை வரை சாலை ஓரங்களில் அனுமதி யின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த கபில்தேவ் (40) என்பவர் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பொய்யுண் டார் குடிக்காடு பிரிவு சாலை ஓரமாக வைக்கப் பட்டிருந்த 50 அடி பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்தது. இதில் கபில்தேவின் கண், தலை, காது உட்பட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். பின்னர் காயங்கள் பலமாக உள்ளதால், அரசு மருத்துவர்கள் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அங்கிருந்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் சாலை ஓரங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என உத்தரவிட்ட நிலையி லும், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவா ளர்கள் தஞ்சை முதல் பட்டுக்கோட்டை வரை சாலை ஓரங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மிகப்பெரிய அள விற்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ள னர். இதனால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய இளைஞர் மீது பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்து படுகாயம் அடைந் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.