திருச்சிராப்பள்ளி, ஜூலை 26 -
திருச்சியில் வேளாண்துறை சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 27) வேளாண் கண்காட்சி துவங்குகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு இரண்டு நாள் பயணமாக வந்தார்.
திமுக பயிற்சி பாசறைக் கூட்டம்
தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்து, வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக் கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் புதனன்று திருச்சியில் நடை பெற்றது.
பாசறைக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து திமுக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ உரையாற்றினார். மக்கள் நலன் காக்கும் சமூக திட்டங் கள் குறித்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசினர். செயலி (app) மற்றும் கணக் கெடுப்பு பணிகள் குறித்து திமுக-வின் அயலக அணி செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா பேசினார்.
சமூக வலை தளங்கள் பயன்பாடும் செயல்படுத்த வேண்டிய முறைகளும் குறித்து திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பேசினார்.
இதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயி லாடுதுறை, நாகப்பட்டினம், திருவா ரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்திய, வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச் சாவடி திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் சிறப்புரையாற்றினார். முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் நன்றி கூறி னார். முன்னதாக திருச்சி விமான நிலை யத்தில் இருந்து, கார்கில் போர் வீரர் சரவணன் நினைவுத்தூணுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், சுற்றுலா மாளிகை சென்ற முதல்வர், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று வேளாண் கண்காட்சி
வேளாண்துறை நடத்தும் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தொடங்கி 28, 29 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியில் நடக்கிறது. இதற்காக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் (கேர்) கல்லூரியில் ‘விவசாயி களுக்கான வேளாண் சங்கமம் - 2023’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கண்காட்சிக்கான அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளன.
இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நடத்திய வேளாண் கண் காட்சியை, தமிழக அரசு சார்பில் வேளாண் துறை முதல் முறையாக திருச்சியில் நடத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் நவீன உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத் துவது குறித்த பல்வேறு உபகரணங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற வுள்ளன. வியாழனன்று (இன்று) காலை 9 மணிக்கு வேளாண் சங்கம கண் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைக்கிறார். பின்னர் விவசாயத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் விவசாயி களுடன் நேரடியாக கலந்துரையாடு கிறார்.
இதையடுத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் கௌரவிக்கவுள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரம் விவசாயி களுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளையும் வழங்கவுள்ளார்.