கரூர், ஏப்.30-
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டப் பேரவை மாவட்டத் தலைவர் ஒ.கே. கண்ண தாசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் கே. சண்முகவள்ளி ஆகியோர் அகில இந்திய மாநாடு குறித்தும் எதிர்காலக் கடமைகள் குறித்தும் பேசினர். மாவட்டச் செயலாளர் பி.ராஜு, மாவட்டப் பொருளாளர் வேல்முருகன், இரா.முத்துச்செல்வன், செல்வம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டதில் வீட்டுமனை இல்லாத அனைவருக் கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், சட்டக் கூலி ரூபாய் 294- ஐ முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.